அதிசய மலர்
![]() |
| அதிசய மலர்-Miracle flower |
அதிசய மலர்
(அதிசய மலருடன் உத்தமன் கடலில் படகில் சென்றபோது நடுநிசியில் ராட்சஸ மிருகத்தைக் கண்டான். அவன் எங்காவது கரை இறங்க நினைக்கையில் ஒரு பெரிய அலை அடித்து அவனது படகைப் பாறைகளுக்கு மத்தியில் தள்ளியது. அவன் தூங்கிக் கொண்டிருக் கையில் சில மலைச் சாதிப் பெண்கள் அதிசய மலர்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தம் குடி இருப்பிற்குச் சென்றனர். உத்தமனும் அவர்கள் பின்னால் சென்றான். அப்போது -1)
அந்த மலைச் சாதியினரின் தலைவன் காயாம்பு உத்தமனிடம் "சாங்காய்ப் பகுதியிலிருந்து வெகு தூரம் பயணம் செய்து இங்கு நீ வந்த காரணம் என்னவோ?”என்று கேட்டான்.
உத்தமனும் "நான் அலையால் கரையில் ஒதுக்கப்பட்டபோது அயர்ந்து தூங்கிவிட்டேன். அப்போது சில பெண்கள் நான் படகில் ஏற்றி வந்த அதிசய மலர்களை எல்லாம் எடுத்துக் கொள்ளவே, அவர்களை அவற்றைத் திருப்பிக் கொடுக்கும்படிக் கேட்ட போது அவர்களோ கொடுக்க முடியாது என இங்கே வரவே நானும் அவர்களைத் தொடர்ந்து இங்கு வந்துவிட்டேன்" என்றான்.
இதற்கு அந்தப் பெண்மணி எவ்வித பதிலும் கூறாமல் வீட்டினுள் சென்றுவிட்டாள். அவர்கள் பேசிய மொழி உத்தமனுக்குப் புரியவில்லையாயினும் அது என்னவாக இருக்கும் என்பதை அவன் ஊகித்துவிட்டான்.
உத்தமன் "இவற்றை அதிசய மலர்கள் என நாங்கள் கூறி வருகிறோம். இவை நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் மலரும். இவற்றை நான் ஒரு முக்கியமான வேலையை ஏற்றுக் கொண்டு எடுத்துப் போய்க் கொண்டிருக்கிறேன்." என்றான்.
காயாம்புவும் ''ஓ அப்படியா! நீ இப்போது நாகபுரம் என்ற நாட்டில் இருக்கிறாய். இது உன் மாணிக்க புரயின் அருகே உள்ள நாடே. இங்கிருந்து நீ எங்கே போக வேண்டும்? இந்த மலர்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறாயே. அதற்குள் அவை வாடி விடாதா? என்று கேட்டான்.
உத்தமனும் தன்னிடமிருந்து விஷயத்தைக் கறக்க காயாம்பு இக் கேள்விகளை கேட்கிறான் என்று புரிந்து கொண்டுவிட்டான். அதனால் அதை மறைக்காமல் விளக்கமாகத் தன் பயணத்தைப் பற்றிக் கூறினான்.
உத்தமனும் 'ஆம்! இம் மலர்கள் மலராவிட்டால் ராட்சஸ மிருகம் வராமல் இருந்துவிடலாம். ஆனால் அதை எங்கள் நாட்டின் அருகே இருக்க விடாமல் வெகுதூரத்திற்கு விரட்டிவிடுவதே என் நோக்கம்' என்றான்.
காயாம்புவும் "உன் நோக்கம் உயர்ந்ததே. அந்த மிருகம் உன் நாட்டிற்குள் வராமலே இருக்க வேறு ஏதாவது வழி உள்ளதா என்று யோசித்தாயா? இதுபற்றி எங்கள் நாட்டு மன்னருடன் பேசி யோசித்தால் ஒருவழி காணலாம். என நான் எண்ணுகிறேன். நாம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிப் போய் மன்னர் மகேந்திர சிம்மரைக் காணலாம் என்று கூறி உட்புறக் கதவைத் தட்டினான். முன்பு வந்த பெண்மணி வரவே அவளிடம் ஏதோ கூறினான்.
அவள் சற்று நேரத்தில் இருவரும் சாப்பிட உணவு கொண்டு வந்தாள். அவளோடு இளம் பெண் ஒருத்தியும் வந்தாள். இவர்கள் உணவுப் பாத்திரங்களை வைத்து விட்டு உள்ளே போகும்போது காயாம்பு "சித்ரா! இங்கே வா" என்று அழைத்தான். அந்த இளம் பெண்ணும் அவனருகே வந்து நின்றாள்.
அவர்கள் தயங்கியவாறே "இவை அழகாயும் மணம் உள்ளனவாயும் இருக்கவே நாங்கள் இவற்றை எடுத்து வந்தோம்" என்றார்கள். காயாம்புவும் "சரி, சரி, நீங்கள் போகலாம்" எனவே அவர்கள் உள்ளே போய்விட்டார் கள்.
சாப்பிட்டு முடிந்ததும் காயாம்பு உத்தமனை அழைத்துக் கொண்டு கிளம்பினான். அவர்களை வழி அனுப்ப வாசல் வரை காயாம்புவின் மனைவியும் மகளும் வந்தார்கள். அந்தக் குடியிருப்பைத் தாண்டியதும் காயாம்பு தான் எடுத்து வந்த அதிசய மலர்க் கட்டை உத்தமனிடம் கொடுத்து "இதை நீயே எடுத்து வா” என்றான். உத்தமனும் அதனை வாங்கிக் கொண்டு அவன் பின்னால் நடந்து சென்றான்.
அவர்கள் அரண்மனை வாசலை அடைந்தபோது அங்கு நின்ற காவலாளிகள் காயம்புவைப் பணிவுடன் வணங்கி உள்ளே செல்ல வழிவிட்டார்கள். ஒரு வீரன் வழி காட்டி அவர்கள் இரு வரையும் உள்ளே அழைத்துச் சென்றான். இருபுறமும் உயர்ந்த தூண்களருகே நின்ற காவல் வீரர்கள் காயாம்புவைக் கண்டதும் பணிவுடன் வணங்கினார்கள்.
உத்தமனும் மன்னனை வணங் கியவாறே 'நலமாகவே இருக்கி றார் அரசே' என்றான். மன்னனும் அவர்கள் இருவரையும் ஆசனங்களில் அமரச் சொன்னான். அப்போது காயாம்பு "உத்தமன் வந்ததே ஒரு பெருங்கதைதான்.' எனக் கூறி அவன் வைத்திருந்த மலரை வாங்கி மன்னன் முன் வைத்தான்.
மன்னனும் "நீங்கள் இருவரும் வரும்போதே நறுமணம் வீசு வதை உணர்ந்தேன். அது இம்மலரிலிருந்துதானா?'' என்று கேட்டான். காயாம்புவும் "ஆம். அரசே. சிங்காய் மலையிலிருந்து இவற்றை உத்தமன் கொண்டு வந்திருக்கிறான். இது நூறு வருடத்திற்கு ஒரு முறை மலரும் அதிசய மலர். இதால் மாணிக்கபுரிக்கே ஆபத்து வந்திருக்கிறது" எனக் கூறி ராட்சஸ மிருகம் பற்றியும் அதைத் தேடிகொண்டு உத்தமன் வந்துள்ளதையும் விவரமாகக் கூறினான்.
இச்சமயத்தில் பதினைந்து வயதுள்ள இளம் மங்கை ஒருத்தி ஓடி வந்து “அப்பா! இந்த மலர் ஏது? மிக அழகாக இருக்கிறதே. எனக்குத் தானே இது" என்று கேட்டாள். மன்னனும் 'இதை இந்த இளைஞன் மாணிக்க புரியிலிருந்து கொண்டு வந்திருக்கிறான்" என்றான். உத்தமனும் "இளவரசியே! இதை தாங்கள் எடுத் துக் கொள்ளலாம்" என்றான்.
அவன் காயாம்புவிடம் "நீங் கள் இருவரும் இன்றிரவு இங்கே தங்கி இளைப்பாறுங்கள் நாளை நாம் இனி என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றான்.
ஒரு அமைச்சர் அவர்களை ஓரு வசதியான பெரிய அறைக்குக் கொண்டுபோய்விட்டு இங்கு இளைப்பாறுங்கள். உங்களுக்கு வேண்டியதைச் செய்யப் பணி யாட்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார்.








கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."