உழைப்பே உயர்வு !
![]() |
உழைப்பே உயர்வு !-Work is the rise! |
உழைப்பே உயர்வு !
ஏழையிடம் இரண்டு பசு மாடுகள் இருந்தன, அவற்றில் கிடைத்த பாலை விற்ற வருமானத்தில் வாழ்ந்து வந்தான். குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. மனைவி, குழந்தைகளுடன் வறுமையில் வாடினான். ஏழ்மையை போக்க மாற்று வழி தெரியாமல் தவித்தான்.
ஒருமுறை, அவன் வசித்த ஊருக்கு வந்திருந்தார் ஒரு ஞானி. அவரிடம் மிகுந்த சக்தி இருப்பதாக பேசிக்கொண்டனர். அவரை சந்தித்து ஆலோசனை பெற சென்றான் ஏழை. மிகுந்த அமைதியுடன், ‘இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்...' என்று ஆசி கூறினார் ஞானி.
ஆண்டுகள் ஓடின. ஞானி. மீண்டும் அந்த ஊருக்கு வந்தார் கடந்த பயணத்தின் போது ஆசி பெற்ற ஏழை, பெருஞ்செல்வந்தன் ஆகியிருந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார், தேடிவருவான் என்று எதிர்பார்த்தார். மூன்று நாட்கள் கடந்த பின்னும் வரவில்லை. நேராக அவன் வீட்டுக்கு சென்றார் ஞானி.
அவர் சென்ற திக்கில் தேடி ஓடினான்; எங்கும் தென்படவில்லை. சோர்ந்து திரும்பினான்; வீட்டில், இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன. தலையில் அடித்து அழுதபடி, அலட்சியத்தால் எல்லாம் போச்சு: பழையபடி வறுமை வாட்டுமே... என புலம்பினான்.
தனித்தவனிடம், இரண்டு மாட்டையும், இப்பவே வித்துடுங்க..." என்றாள் மனைவி, அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது. 'மாட்டை விற்றால் வருமானத்துக்கு என்ன வழி.. எதுவும் புரியாமல் கேட்டான். மாடுகளை விற்க மறுபடியும் வலியுறுத்தினாள் மனைவி.
'சரி... நடப்பது நடக்கட்டும்..." மாடுகளுடன் சந்தைக்கு புறப்பட்டான். நன்றாக வளர்ந்திருந்ததால் மாடுகளை உடனே நல்ல விலையில் விற்க முடிந்தது. கண்ணீருடன் வீடு திரும்பியவனை, புன்னகையுடன் வரவேற்றாள் மனைவி. ஒன்றும் புரியாமல் நின்றவனிடம், 'கொல்லைப் புறத்தில் போய் பாருங்க..." என்றாள்.
குழந்தைகளே... உழைப்பு எப்போதும் வாழ்க்கையை உயர்த்தும்.
கதைஆசிரியர்:எம்.ஏ.நிவேதா
வாரமலர்
Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie
கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."