உயர்ந்த மனிதர்
![]() |
உயர்ந்த மனிதர்-High man |
உயர்ந்த மனிதர்
பொன்னனுக்கு அவசரமாக ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தும் கடன் கிடைக்கவில்லை. முடிவில் மகாக் கஞ்சனான தன் சிற்றப்பா சின்னசாமியிடம் போனான்.
சின்னசாமியோ “நான் உனக்கு கடன் கொடுத்தால் நீ எப்படித் திருப்பிக் கொடுப்பாய்? உனக்கு வீடோ நிலமோ எதுவும் இல்லையே. நீ சிவகிரிக்குப் போய் சிவானந்தம் என்ற புண்ணிய வானைப் பார். அவர் யாருக்கு வேண்டுமானாலும் இரக்கப்பட்டுக் கடன் கொடுக்கிறவர். அவரிடம் கடன் வாங்கி உன் முடையைத் தீர்த்துக் கொள்" என்று சொல்லி அனுப்பினான்.
பொன்னனுக்கோ பணம் தேவை. இவரை விட்டால் வேறு யாரிடமிருந்தும் கிடைக்காது. இப்படி வட்டிக்கு வட்டியாக நிறையப் பணம் கறக்கும் இவரையா புண்ணியவான் என்று எல்லோரும் புகழ்கிறார்கள்? என்ன வானாலும் இப்போது பணம் கிடைக் கிறதே என்று எண்ணி அவன் பத்திரம் எழுதிக் கொடுத்துப் பணம் வாங்கிக் கொண்டு சென்றான்.
முதல் வருடம் பொன்னன் அந்தப் பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்ததில் செலவெல்லாம் போக ஐயாயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. அதிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் சிவானந்தத்திற்கு திருப்பிக் கொடுக்கலாம் என அவன் நினைத்தான். அப்போது ஒரு வியாபாரி அவனிடம் “உன்னிடம் ஐயாயிரம் ரூபாய் உள்ளது. உன்னை என் வியாபாரத்தில் கூட்டாளி யாகச் சேர்த்துக் கொள்கிறேன். ஒரே வருடத்தில் உனக்கு முப்பதாயிரம் ரூபாய் கிடைக்கும்" என்று ஆசை காட்டினான்.
அந்த ஆசை வார்த்தையில் விழுந்த பொன்னன் “இப்போது இவனோடு கூட்டு சேர்ந்து ஒராண்டில் முப்பதாயிரம் சம்பாதித்து சிவானந்தருக்கு நாலாயிரம் ரூபாய் கொடுத்து விடலாம். அப்போது இருபத்தாறாயிரம் லாபம் தானே" என எண்ணி அதற்குச் சம்மதித்தான்.
அந்த ஆண்டு நிறைய லாபம் வரவே ஆண்டு முடிவில் சிவானந்தருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் அதற்கடுத்த ஆண்டிற்குத் தள்ளிப் போட்டான். இப்படியே ஐந்து ஆண்டுகள் கழிந்தன. பொன்னனிடம் பல லட்ச ரூபாய்கள் சேர்ந்து விட் டன. அப்போது பொன்னன்" ஒரு ஆயிரம் ரூபாய் கடன் முன்பு வாங்கியதற்கு இப்போது முப்பத்தி ரெண்டாயிரம் ரூபாய் கொடுப்பதா? இது அநியாயம்" என எண்ணினான்.
அவர் போனதும் பொன்னன் "இவரிடம் நான் வாங்கின கடன் ஆயிரம் ரூபாயை வசூலிக்க நினைக்கிறாரோ? அப்படியானால் இந்த ஐந்து வருஷ வட்டியை எப்படி இந்தப் புண்ணி வான் வசூலிக்கப் போகிறாரோ பார்க்கலாம்" என்று எண்ணிக் கொண்டான்.
இந்த ஐந்து பேர்களும் அன்றிரவு கூடி ஒரு திருடனை சிவானந்தரின் வீட்டிற்கு அனுப்பினார்கள். அவன் அங்கு போய் சிவானந்தரின் மூத்த மகனைக் கத்தியைக் காட்டி மிரட்டி இரும்புப் பெட்டியைத் திறக்கச் சொன்னான். அதிலிருந்து இரகசிய அறையை அவன் கண்டுபிடித்து அதிலிருந்த கையேட்டை எடுத்துக் கொண்டுபோய் பொன்னனி டமும் மற்ற வியாபாரிகளிடமும் கொடுத்தான்.
அவர்கள் ஐவரும் அந்தக் கையேட்டைக் கொளுத்தி அழித்து விடத் தீர்மானித்தார்கள். அதற்கு முன் அதில் என்னதான் எழுதி இருக்கிறது என்று படிக்க விரும்பினார்கள். அதை படித்ததில் அதில் இவ்வாறு இருந்தது.
"நான் ஏழைகளுக்குக் கடன் என்ற பெயரில் பண உதவி செய்து வந்தேன். பணத்தை இனாமாகக் கொடுப்பதென்றால் அது தேவைப்படாதவர்கள் எல்லாம் வந்துவிடுவார்கள். எனவே கடன் கொடுத்து அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினேன். என் பணத்தாலும் அறிவுரைகளாலும் பலர் பயனடைந்தார்கள். அவர்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் அதை நல்ல காரியங்களுக்காகச் செலவு செய்வேன். அதிலிருந்து ஒரு பைசா கூட என் சொந்த செலவிற்கு எடுத்துக் கொள்ள மாட்டேன். அவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் பேசாமல் இருந்துவிடுவேன். அவர்களிடம் எழுதி வாங்கிய கடன் பத்திரங்களை அவர்கள் என் வீட்டிலிருந்து போனதுமே கிழித்து எறிந்து வந்தேன். என் மூத்த மகனும் என்னைப்போல நடந்தால் என் ஆத்மா சாந்தி அடையும். '
இதைப் படித்து அவர்கள் திகைத்துப் போனார்கள். அக் குறிப்பேட்டில் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என் பதே இருந்தது. அதில் கடைசி வரி பொன்னானுக்குக் கொடுக்க வேண்டியது ஆயிரம் ரூபாய் என்றிருந்தது.
சிவானந்தர் எவ்வளவு புண்ணியவான் என்பது அவர்களுக்கு விளங்கியது. அவர்கள் அந்தக் குறிப்பேட்டை இரகசியமாய் மறு படியும் அந்த இரும்புப் பெட்டிக்குள் வைத்துவிட்டார்கள். தாம் கொடுக்க வேண்டிய கடன் பாக்கியை சிவானந்தரின் மூத்த மகனிடம் கொடுத்தார்கள். சிவானந்தரின் மூத்த மகனைப் போலவே பொன்னனும் செயல் பட்டு புதிய மனிதனானான்.
கதை ஆசிரியர்: கி. அருணா
அம்புலிமாமா
கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."