இலையில் தங்கம்!
இலையில் தங்கம்!
அறிவாளியான பெரும் புலவர் ஒருவர், வறுமையில் வாடினார். பாண்டிச்சேரியில் வள்ளல் ஒருவர் இருப்பதை அறிந்து, அங்கு சென்றார். வள்ளல் வயலுக்கு சென்றுள்ளதாக, பணியாளர்கள் கூற, அங்கு சென்றார், புலவர்.
அதைப் பார்த்த புலவர், 'என்னடா இது...நாமே, வறுமையில் இவரைத் தேடி வந்திருக்கிறோம். இவரோ, கீழே கிடக்கும் நெல் மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாரே...' என,நினைத்தார்.
'புலவரே, எவ்வளவு பொன் மணிகள் இருந்தாலும், அந்தத் தங்க மணிகளால் நேரடியாக நம் பசியைப் போக்க முடியாது. நம் உடம்புக்குள் சென்று, உடலோடு ஒன்றுபட்டு உடலாகும் பேறு, நெல் மணிகளுக்குத் தான் உண்டு. அதை எண்ணித்தான் நான், அறுவடையான வயல்களில் சிந்திக் கிடந்த நெல் மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தேன்...' என்றார், வள்ளல்.
'புலவரே... நீங்கள் உண்மையைப் புரிந்து கொண்டதே போதும். உணவுப் பொருளை வீணாக்குவது என்பது, உழவனின் உழைப்பை அவமானப் படுத்துவதாகும். இதைப் புரிந்து கொண்டால் சரி...' என்று சொல்லி, தங்கக் காசுகள் உள்ள இலையை, ஒரு பக்கமாக இழுத்து வைத்தார், வள்ளல்.
வேறு இலையைப் புலவரின் முன் போட்டு, உணவு பரிமாறினார். புலவரும் உண்டு முடித்தார்.
உண்டு முடித்த புலவரின் கைகளில், இலையில் கொட்டப்பட்டிருந்த தங்கக் காசுகளை எல்லாம், அப்படியே சிறு மூட்டையாகக் கட்டி ஒப்படைத்தார், வள்ளல்.
திருப்தியோடு திரும்பினார், புலவர். அந்தப் புலவர், ராம கவி ராயர். அவரை ஆதரித்த பாண்டிச்சேரி வள்ளல், ஆனந்தரங்கம் பிள்ளை.
பி.என்.பரசுராமன்

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."