இதுவும் கடந்து போகும்
![]() |
| இதுவும் கடந்து போகும்- idhuvum-kadandhu-pogum |
இதுவும் கடந்து போகும்
ஞாயிறு
மதிய உணவு உண்டு , சற்று அசந்து உறங்க ஆரம்பித்தான் ராகவன்.
செல்போன்
சிணுங்கியது , ஒரு வாட்ஸ் ஆப் தகவல் நண்பன் கிருஷ்ணனிடம் இருந்து வந்தது.
அதில் வந்த
செய்தியை பார்த்ததும் ராகவனுக்கு தூக்கம் தொலைந்தது.
“நண்பா ,
ராகவா நான் தூக்கு மாட்டிகிட்டுசாக போறேன், நான் இந்த உலகத்தில இருந்து யாருக்கும்
எந்த பிரயோசனம் இல்ல. என்ன பெத்தவங்களும் , என் நண்பர்களும் எனக்கு கஷ்டத்துல
உதவல. அவங்களே என்னை இந்த கடன் பிரச்சனையில் இருந்து காப்பாத்த நினைக்கல. வேற யாரு
என்னை காப்பாத்துவாங்க , அதான் நான் சாக போறேன் “ என்ற தகவல் வந்தது.
அதனை கண்டதும்
, ராகவன் பதில் அனுப்பினான்.
“நண்பா
கிருஷ்ணா , நீ சொல்றது உண்மை தான். நீ இந்த உலகத்தில் வாழ்ந்து யாருக்கும்
பிரயோஜனம் இல்லை தான். செத்து போயிரு. “ என்று அனுப்பி விட்டு , புலம்ப
ஆரம்பித்தான் ராகவன்.
“இவனுக்கு
வேலை இல்லை , எப்ப பார்த்தாலும் , சாக போறேன் , ஊரை விட்டு ஓட போறேன் , யாருக்கும்
சொல்லாம எங்கயாவது போயிருவேன் என்று எல்லார் கிட்டேயும் மிரட்டி கிட்டே இருந்தா ,
போகட்டும் என்று தான் எல்லாரும் சொல்வார்கள். பிரச்சனைய முடிக்க என்ன வழி என்பதை
யோசிப்பதே இல்லை.”
என்று
புலம்பி தீர்வதற்குள் , வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ கால் (போன்) வந்தது.அதில்
வீட்டில் தூக்கு மாட்டி கொண்டு இருப்பதை நேரடியாக காண்பித்து கொண்டு இருந்தான்
கிருஷ்ணன்.
அதனை
கண்டதும் ராகவன் , சட்டென எழுந்து அவன் வீட்டை நோக்கி ஓடினான்.
கிருஷ்ணன்
வீடு , பக்கத்து தெருவில் தான் இருக்கிறது , நடந்து சென்றால் ஐந்து
நிமிடத்திற்குள் சென்று விடலாம்.
கிருஷ்ணன்
வீட்டை அடைந்தான். கிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லை.
உறவினர்களின்
திருமண நிகழ்விற்கு சென்று உள்ளனர் கிருஷ்ணனின் அம்மா அப்பா.
வீட்டிற்குள்
சென்று , கிருஷ்ணனின் அறை கதவை உடைத்து உள்ளே சென்றான் ராகவன்.
சில நிமிட
போராட்டம் , கழுத்தில் இருக்கி கொண்டு இருந்த முடிச்சுகள் , ராகவனால்
அவிழ்கபட்டது.
கிருஷ்ணன்
மூச்சிரைக்க கீழே விழுந்தான். அவனை காப்பற்றிய திருப்தியில் ராகவனும் மூச்சிரைத்த
படி அமர்ந்தான்.
“பைத்தியமாடா
, நீ. உயிரை விட்டுட்டா எல்லா பிரச்னையும் முடிஞ்சிருமா.
நீ போனதுக்கு பிறகு அந்த
பிரச்னையும் உன் பெத்தவங்களுக்கு தான் போகும். எந்த பிரச்னையும் நேரா எதிர் கொள்ள
தைரியம் இருக்கணும். மத்தவங்கட்ட பேசும் போது நல்ல விதமா பேசணும் , சாக போறேன்னு
அடிக்கடி சொன்னா , உன்கிட்ட பேச யாரும் வரமாட்டாங்க. உன்னால வந்த பிரச்சனைய நீ
எதிர் கொள்ள பயந்தா , உன் கூட இருக்கிறவங்க எப்படி அதுக்கு பொறுப்பு ஏத்துப்பாங்க.
இதுவும் கொஞ்ச காலம் தான் , நீ நல்லா வருவ என்று, முதல்ல நீ நம்பனும். இதுவும்
கடந்து போகும் , வாழ்க்கையில நல்லது, கெட்டது என்று மாறி மாறி வரும் , அதனை நாம
ஏத்துக்கிற பக்குவத்திற்கு வரணும் , அவ்வளவு தான்.” என்று பேசி , கன்னத்தில்
அறையாத குறைக்கு பளீர் என்று பேசி முடித்தான் ராகவன்.
ராகவனின் பேச்சு , கிருஷ்ணனுக்கு
நல்ல பாடம் என்றாலும் , அதனை அந்த சூழலில் அவனால் ஏற்று கொள்ள கொஞ்ச நேரம் ஆகும்.
மனம் மாற முயற்சி செய்து
கொண்டிருந்தான் கிருஷ்ணன்.
இதுவும் கடந்து போகும் என்பது
கிருஷ்ணனுக்கு மட்டும் அல்ல , அனைவருக்குமே.
# இதுவும் கடந்து போகும் – இதுவும் சிறிது காலம் தான் , என்று வாழ்க்கையின் கடினமான நேரங்களில் நம் அனைவரின் மனதில் பதிய வேண்டும்.
# வாழ்க்கை
வாழ்வதற்கே , மரணத்தை தேட நாம் போக வேண்டாம் – அது வரும் வரை , வாழ்க்கையை
சிறப்பாக வாழ்வோம்.
முற்றும்
காமாட்சி அம்மன் கோயில் தெரு, மேல அனுப்பனடி, மதுரை

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."