 |
| மது ஒழிப்பு-Abolition of alcohol |
மது ஒழிப்பு
மதுரை மேல மாசி வீதி மூன்று சாலை சந்திப்பு இடத்தில்,
அதிகாலை ,
இரு வயதான துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த படி,
“ ஏன் சுந்தரம் ? நேத்து இங்க என்னா மீட்டிங் போட்டாங்க ?“ என்று மீனாட்சி
கேட்டாள். ,
“ மது ஒழிப்பு. அரசுக்கு எதிரா போராட்டம்.மதுவை ஒழிக்க சொல்லி மாபெரும்
போராட்டம் நடத்தியது எதிர்கட்சி “ என்று சுந்தரம் கூறினான்.
“ மது ஒழிப்பு போராட்டம்னு சொல்ற , இங்க பார்த்தா ஒரு லோடு சரக்கு பாட்டில்
கிடக்கு. இத சுத்தம் செய்யவே நேரமாகும் போல !” என்றாள் மீனாட்சி.
“ மது ஒழிப்பு போராட்டம் தான் , அதான் மதுவ வாங்கி ஒழிச்சிருக்காங்க. போராட்டத்தில்
கலந்திருக்க ஒவ்வொருவருக்கும் ஒரு குவாட்டரும், கோழி பிரியாணியும் யாருக்கும்
தெரியாம கொடுத்திருக்காங்க. கூட்டம் கூடிருச்சு.” என்று சுந்தரம் கூறினான்.
“சிரிப்பு தான் வருது.பேரு மது ஒழிப்பு மாநாடு , மது குடிக்காத ஆளே இல்லை “
என்று மீனாட்சி நக்கலாக கூறினாள்.
“ இந்த மது ஒழிப்பு போராட்டம் நடந்ததால, அக்கம் பக்கத்தில் இருக்கும் அரசு
டாஸ்மாக்ல நேற்று 10 லட்சத்திற்கு மேல சரக்கு வித்திருக்கு. “ என்று சுந்தரம்
புள்ளி விவர கணக்கிட்டான்.
“ என்னப்பா ! சொல்ற சுந்தரம்.10 லட்சத்திற்கு மேல சரக்கு விற்பனையா ? “ என்று மீனாட்சி
கேட்க ,
“ஆமா மீனாட்சி. ஒவ்வொரு முறையும் அரசை எதிர்த்து போராட்டம் பண்றதால மட்டும்
மது ஒழிப்பு சாத்தியமாகுமா !. தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் சுய
கட்டுப்பாடு இல்லை.நாம ஒவ்வொருவரும் நமக்குள்ள சுய ஒழுக்க போராட்டம் நடத்தனும் ,
இல்லை கடைபிடிக்கணும். “ என்று சுந்தரம் கூற ,
“ நீ சொல்றது சரிதான். ஆனா அரசாங்கம் அத விற்பனை பண்றதால தான , வாங்கி
குடிக்கிறாங்க. “ மீனாட்சி கூறினாள்.
“ நீ சொல்றது சரிதான் மீனாட்சி. விக்கிறாங்க என்பதால தான் குடிக்கிறாங்களா,
நம் மது பிரியர்கள் ?. “ சுந்தரம் கேள்வி கேட்க ,
“ ஆமா. அத விக்காம இருந்தா எப்டி குடிப்பாங்க ? அதற்க்கு தான இப்படி ஒவ்வொரு
அரசும் மாறி மாறி வரும் போது மது ஒழிப்பு போராட்டம் பண்றாங்க “ என்று மீனாட்சி
கூறினாள்.
“ எதிர் கட்சி போராட்டம் என்பது அரசியல். எதிர் கட்சிகள் மாறி மாறி வரும் போது
இந்த போராட்டம் தொடரதான் செய்யும்.
அரசியலுக்குள் போக வேண்டாம். நான் சொல்றது தனி மனிதனின் சுய ஒழுக்கம் , சுய
கட்டுப்பாடு “ என்று உறுதியாக சுந்தரம் பேச்சை தொடர்ந்தான்.
“ அரசை குறை சொல்வதை தவிர்த்து , நாம் ஒவ்வொருவரும் குடிக்க கூடாது என்று ஒரு
தீர்க்கமான முடிவு எடுக்கணும். சாமிக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறோம்ல , அந்த
மாதிரி. நாம குடிக்கு அடிமையாகிட்டோம் அதான் விஷயம். அதுல இருந்து விடுபட என்ன
பண்ணணுமோ அத தான் யோசிக்கணும். அத விட்டுட்டு அரசு விக்கிறதால தான் குடிக்கிறேன்னு
சொல்றதெல்லாம் சின்ன பிள்ளை தனம். அரசு
எவ்வளோ நல்லது செய்தாலும் , அதனை நாம் பாராட்டுவதில்லை. என்னை பொறுத்த வரை மது
ஒழிப்பு என்பது அரசால் மட்டும் சாத்தியமா என்றால் நிச்சயம் இல்லை. மது ஒழிப்புக்கு
முக்கிய தீர்வு , தனிப்பட்ட , ஒவ்வொருவரின் சுய கட்டுப்பாடு , சுய ஒழுக்கம் “ என்று சுந்தரம் கூற ,
“ ஆமா. எங்க நம்ம ஆளுக, எங்க திருந்த. நல்லதுக்கு கெட்டதுக்கு எதும்னாலூம் மது.
மது இல்லாத விசேசம் இல்லை. இந்த மதுவால்
தான் எத்தனையோ குடும்பங்கள் நடு தெருவில் நிற்கிறது“ என்று மீனாட்சி கூறி
கொண்டிருந்த போது ,
“ அங்க ரெண்டு பேரும் என்ன வேல பார்க்கிற மாதிரி தெரியலே ?“ என்று
சூப்பர்வைசரின் சப்தம் கேட்க , இருவரும் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
“ நமக்கு எதுக்கு வம்பு. என்னம்மோ பண்ணிட்டு போறாங்க . நாம வேல
பார்த்தா தான் சம்பளம். “ என்று நையாண்டியாய் சுந்தரம் கூறி , மது பாட்டில்களை ஒழிக்க
(குப்பை அள்ள) ஆரம்பித்தனர்...
# மது ஒழிப்பு என்பது அரசுடன், தனி
மனிதனின் ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் சாத்தியமே !
# மதுவினால் எத்தனையோ குடும்பங்கள் நடு
தெருவில் இருப்பதை நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.
# மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.
முற்றும்
கதை ஆசிரியர்: மணிராம் கார்த்திக்
சிறுகதை : மணிராம்
கார்த்திக்
காமாட்சி அம்மன் கோயில் தெரு,
மேல அனுப்பனடி, மதுரை

இந்த கதை என் சொந்த கற்பனை கதை
, என்பதை உறுதி அளிக்கிறேன்
Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories
கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."